மும்பை, ஏப். 29- வங்கிக் கடன் முறைகேடு வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,034 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட் ரக்சர் லிமிடெட் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நடவடிக்கையையும் சேர்த்து, இதுவரை அனில் அம் பானி குழுமத்திற்குச் சொந்தமான மொத்தம் ரூ.19,344 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
யெஸ் வங்கி, இந்திய யூனியன் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் மகாராட்டிரா ஆகிய வங்கிகளில் ஒரு நிறுவனத்தின் பெயரில் கடன் பெற்று, அவற்றை சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றியதாக (சுமார் ரூ.17,000 கோடி மோசடி) சிபிஅய் மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
