டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*நிதிஷ் குமாரிடம் இருந்து தட்டிப் பறித்து முதலமைச்சர் பதவியை கைப்பற்றியது பாஜக. பீகாரில் முதல் முறை பாஜக ஆட்சி: சாம்ராட் சவுத்ரி இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார்
* அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி – இது தான் தமிழ்நாடு – மு.க.ஸ்டாலின் பேட்டி
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 33 % மகளிர் இட ஒதுக்கீட்டுக்காக மக்களவையின் பலத்தை 850 ஆக உயர்த்தும் மசோதா நாடாளு மன்றத்தில் நாளை தாக்கல்
* ஒருமித்த கருத்து இல்லாமல் தொகுதி மறுசீரமைப்பு கூடாது, தென் மாநிலங்கள் கூட்டணி அமைத்திட தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் வேண்டுகோள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தொகுதி மறுவரையறை செய்வதற்கான அரசியல மைப்பு திருத்தச் சட்ட வரைவு மசோதா நகல் வெளியானது. தொகுதி மறுவரையறை காரணமாக மக்களவை தொகுதி எண்ணிக்கை 543இல் இருந்து 850ஆக அதிகரிக்கிறது. தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகள் 39இல் இருந்து 59ஆக உயருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவை தொகுதி எண்ணிக்கை 80லிருந்து 120ஆக உயர உள்ளது.
* எங்களின் மோசமான அச்சங்கள் உண்மையாகி விட்டன: தெற்கு மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க என்.டி.ஏ. அரசு தொகுதி மறுவரையறையை பயன்படுத்துகிறது, ஜான் பிரிட்டாஸ் விமர்சனம்.
* ஒடிசா உண்டுறை பள்ளியில் ‘பழைய உணவை’ சாப்பிட்ட 150 குழந்தைகள் உடல்நலம் பாதிப்பு; 5ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழப்பு. பள்ளி நிர்வாகத்தின் மீது கவனக்குறைவு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பெற்றோர்கள், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*எதிர்க்கட்சிகள் கூட்டம்: பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் மற்றும் தொகுதி மறுவரையறை குறித்த நாடாளுமன்ற அமர்வுக்கு முன், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு கார்கே தலைமை தாங்குகிறார்
தி இந்து:
* ஜாதிவாரி கணக்கெடுப்பை தவிர்ப்பதற்காகவே, பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அரசு அவசரப்படுத்தியுள்ளது – அகிலேஷ் குற்றச்சாட்டு
டைம்ஸ் ஆப் இந்தியா:
* 2025 நீட் பி.ஜி. தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டதன் மூலம், மருத்துவ படிப்பில், நிகர்நிலைப் பல்கலைக்கழ கங்கள் ரூ. 2,000 கோடி வருவாய் கல்லா கட்டியுள்ளன.
தி டெலிகிராப்:
*தமிழ்நாட்டில் ஸ்டாலினுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம்.
– குடந்தை கருணா

