கங்கை ஆற்றில் அசைவு உணவு சாப்பிட்ட
14 வாலிபர்கள் கைதாம். அப்படியானால் அந்த கங்கை ஆற்றில் வாழும் மீன்களை என்ன செய்ய உத்தேசம்? கிழட்டுப் பசுக்களை உயிருடன் கங்கையில் தள்ளி விடுகிறார்களே அதை என்ன செய்யப் போகிறார்கள்? காவிகளின் மதவெறிக்கு கணக்கே இல்லையோ – ஓ – கங்கை ஆற்றில் படகில் மாமிசம் சாப்பிட்டவர்கள் முஸ்லிம்களாயிற்றே!
வழக்கு விசாரணை : தி.மு.க. எம்பி மனு
அதிமுக முன்னாள் அமைச்சர்கள்மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்பி கிரிராஜன் வழக்கு தொடர்ந்து உள்ளார்; வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
அப்படி போடு!
சென்னை பல்லாவரம் உட்பட்ட பகுதியில் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசாமிக்கு 20 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு! சிறுமிக்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு.
5 இடங்கள்
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கீடு.

