சென்னையில் கார்ல் மார்க்ஸ் முழு உருவச் சிலை! முதலமைச்சருக்கு நன்றி!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கார்ல் மார்க்ஸ்

மனிதகுலச் சிந்தனைமீது

மேலதிகத் தாக்கம் செலுத்திய

மெய்யாளன்

பூகம்பம் இல்லாமல்

பூமியை அசைத்தவன்

உழைப்பால் உலகை

ஒன்றுபடுத்த நினைத்து

நாடற்றவனாய்ச்

செத்துப்போனவன்

அவன் எலும்புகளை

வறுமையின் ரம்பப் பற்கள்

அறுத்த போதும்

“தத்துவத்தின் வறுமை”

எழுதியவன்

ஆடைகளை

அடமானம் வைத்து

உழைக்கும் வர்க்கத்தின்

மானம் காத்தவன்

குழந்தையின் காலணிகளை

அஞ்சல் செலவுக்கு

அடமானம் வைத்தவன்

மதங்களுக்கெதிராய்

மதமற்ற மதம் கண்டவன்

அறிவுக் காதல்

அவன்மீதெனக்கு

31.05.1993

லண்டன் ஹைகேட்டில்

மார்க்ஸின்

கல்லறை கண்டடைந்தேன்;

முட்புதர் களைந்து

மலர் வளையம் வைத்தேன்

கல்லறையில் உள்ளது

மார்பளவுச் சிலைதான்;

கன்னிமாராவில் நிற்பது

முழு உருவச் சிலை

நன்றி!

– கவிப்பேரரசு வைரமுத்து

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *