மும்பை, பிப். 10- மகாராட்டிரா மாநிலத்தில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து சமிதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. நேற்று (9.2.2026) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பார்பானி மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க. தலைவர் சுரேஷ் வார் புட்கரின் குடும்பத்தினர் 5 பேர் போட்டியிட்டனர்.
வார்புட்கரின் மகள் சோனால் தேஷ்முக்த், மகன் சம்ஷேர் வார் புட்கர், மருமகள் ப்ரேர்னா வார்புட்கர், மருமகன் உத்கார்ஷ் வார்புட்கர், அஜித் வார்புட்கர் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் அஜித் வார் புட்கர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இவர் பாஜக சார்பில் போட்டி யிட்ட உத்கார்ஷ் வார் புட்கரை 111 வாக்குகள் வித் தியாசத்தில் வீழ்த்தினார்.
சோனால் தேஷ்முக்த் சிவ சேனா (UBT) சார்பில் போட்டியிட்டார். இவர் திலிப் தேஷ்முக்த்-யிடம் 2674 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விய டைந்தார்.
சம்ஷேர் வார்புட்கர் சிவ சேனா (UBT) வேட் பாளர் பாண்டுரங் கில்லாரேயிடம் 1,604 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மருமகள் பிரேர்னா 2,098 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
சுரேஷ் வார்புட்கர் மகாரா;lடிரா முன்னாள் அமைச்சர் ஆவார். இவர் பா.ஜ.க.-வில் கடந்த ஆண்டு இணைந்தார். 2008 முதல் 2009 வரை விவசாயத்துறை அமைச் சராக இருந்துள்ளார்.
மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தல் பா.ஜ.க. தலைவரின் குடும்பத்தில் அய்ந்து பேரில் நான்கு பேர் தோல்வி!
Leave a Comment
