கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடனேயே 4 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – ராகுல் காந்தி

Viduthalai
1 Min Read

பெங்களூரு,ஏப்.18- கருநாடக மாநில சட்டமன்றத்திற்கு மே 10இல் வாக்குப்பதிவு நடைபெறு கிறது. இதையொட்டி கருநாடக மாநிலம் கோலாரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜெய்பாரத் மாநாடு நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மேனாள் தேசிய தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:

பாஜ அரசு 40 சதவீத கமிஷன் பணத்தை பயன்படுத்தி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. கருநாடக  மக்கள் பா.ஜ.வின் இந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கொள்ளை அடித்த பணத்தை பயன்படுத்தி ஆட்சி அமைக்கும் பா.ஜ.வின் முயற்சி தோல்வி அடை யும். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை 150 இடங் களில் வெற்றிபெற வைக்க வேண் டும் என்று கரு நாடக மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். 

ஆட்சி அமைந்தவுடனே 4 வாக்குறுதி நிறைவேற்றம்

கருநாடகாவில் காங்கிரஸ் கட் சியின் சார்பில் ஏற்கெனவே நான்கு வாக்குறுதிகள் அளிக்கப் பட்டுள்ளன. கிரக லட்சுமி திட்டத் தினால் ஒவ்வொரு வீட்டின் குடும்ப தலைவிகளுக்கும் மாதந் தோறும் ரூ.2 ஆயிரம் அளிக்கப் படும். ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 200 அலகு இலவச மின்சாரம், வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000, டிப்ளமோ படித்த வேலை இல்லாத நபர்க ளுக்கு ரூ.1500, அன்னபாக்யா திட் டத்தின் கீழ் ஏழைகளுக்கு தலா 10 கிலோ விலை இல்லாத அரிசி வழங்குவது என்ற திட்டங்கள் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த முதல் நாளில் அமல்படுத் தப்படும் என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *