அதிகரித்துவரும் வெங்காய விலை! கூட்டுறவு அங்காடியில் ரூ.30-க்கு விற்பனை தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2 Min Read

சென்னை,நவ.6- கூட்டுறவுத் துறை யின் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் வெங்காயம் கிலோ ஒன்றிற்கு ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அறிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் விளை பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், தற் போது வெங்காயம் விலையும் அதிக ரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற் போது வெங்காய விலை ரூ.100-அய் தொடவுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வந்தது. இதனால் பொதுமக் கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். பொதுமக்களின் சங்கடத்தை தீர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டு வர பாடுபட்டது. அதோடு கூட்டுறவு அங் காடியான, பண்ணை பசுமை கடைக ளில் தக்காளி குறைந்த விலையிலேயே விற்கப்பட்டு வந்தது. 

வெளிச்சந்தைகளில் ரூ.100-க்கு விற் கப்பட்டு வந்த தக்காளி, பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்கு விற்பனை யானது. மேலும் மக்களுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்று உணவுப் பங்கீட்டு விற்பனைக் கடைகளிலும் தக்காளி விநியோகம் செய்யப்பட்டது. இந்த சூழலில் தற்போது வெங்காயம் விலை அதிகரித்து வரும் நிலையில், பண்ணை பசுமை கடைகளில் ரூ.30-க்கு வெங்காயம் விற்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியர்கருப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு பின் வருமாறு:

“கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்க ளில் வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்து வருகிறது. பொதுமக்க ளுக்கு நியாயமான விலையில் வெங்கா யத்தினை விற்பனை செய்திட தமிழ் நாடு அரசு வெங்காயத்தின் விலை ஏற் றத்தை கட்டுப்படுத்த பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது. இந்த விலையேற்றத்தை கட்டுப் படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள தமிழ்நாடு முதல மைச்சர் அவர்கள் அறிவுறுத்தி உள் ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களின் உத்தரவின் படி ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படையாமல் இருக்க கூட்டு றவுத்துறையின் மூலமாக முதற்கட்ட மாக சென்னையில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடை கள் மற்றும் 4 நடமாடும் விற்பனை வாகனங்கள் 6ஜி 60ஜி 14 மய்யங்கள் மூலம் 6.11.2023 அன்று முதல் வெங் காயம் விற்பனை செய்யப்படுகிறது.

தற்பொழுது உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலை யில், கூட்டுறவுத்துறையின் மூலமாக பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலம் கிலோ ஒன்று ரூ.30 வீதம் விற் பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தேவைக்கேற்ப தமிழ்நாட் டில் உள்ள வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை பிற பகுதிகளிலும் எடுக்கப்படும். குறுகிய காலத்திற்குள் வெங்காயம் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசு முழு முயற்சி மேற் கொண்டு வருகிறது” 

-இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *