…..செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
1 Min Read

கல்லுதானே!

*அயோத்தி ராமன் கோவில் கர்ப்பக் கிரகத்தில் 5 அடி கருங்கல் மூலவர் சிலை.

>>கடவுள் அல்ல – கல்லுதான் என்பதை இப்பொழுதாவது ஒப்புக்கொண்டால் சரி! மேலும் ராமன்தான் சிரயு நதியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டு விட்டான் என்று ஒரிஜினல் வால்மீகி இராமாயணம் கூறிவிட்டதே!

ஒப்புக்கொள்கிறாரோ!

*உத்தரப்பிரதேசத்தில் தொழில் அதிபர்களை ரவுடிகள் யாரும் இனி மிரட்ட முடியாது – முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் பெருமிதம்.

>>ஆக, இதுவரை ரவுடிகள் தொழிலதிபர்களை மிரட்டிக் கொண்டிருந்தனர் என்பதை மறைமுகமாக சாமியார் முதலமைச்சர் ஒப்புக்கொள்கிறார், அப்படித்தானே!

பின்னணி என்ன?

*பா.ஜ.க. மற்ற மதங்களுக்கு எதிரானது என பொய்ப் பிரச்சாரத்தை கட்டமைக்கிறார்கள்.

– தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் 

அண்ணாமலை குற்றச்சாட்டு

>>குடியுரிமைச் சட்டம் என்பது என்ன? கருநாட காவில் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததன் பின்னணி என்ன? பாபர் மசூதியை இடித்ததுதான் என்ன? என்ன?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *