மேனாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் 10 ஆயிரம் பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தஞ்சை, ஜன.27- ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் கொடுத்தார்.

அதையடுத்து 21.1.2026 அன்று தி.மு.க.வின் அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் சேர்ந்தார். வைத்திலிங்கம் ஒரத்த நாடு தொகுதியில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

அதிமுக ஆட்சியில் அமைச்ச ராகவும் இருந்துள்ளார். அதிமுக உட்கட்சி பூசலின் விளைவாக ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிய அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவில் வைத்திலிங்கம் இருந்தார். ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராகவே அவர் பார்க்கப்பட்டவர்.

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் இன்னொரு கட்சியில் சேரக்கூடாது என்பதால் சட்ட மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய பின் தி.மு.க.வில் சேர்ந்தார். அவர் தி.மு.க.வில் சேர்ந்தது ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி என்று கூறப்படுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்ட ஓபிஎஸ், அவரது ஒவ்வொரு ஆதரவாளராக இழந்து வருகிறார்.அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

அதேபோல் மருது அழகுராஜ், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம் ஆகியோரும் தி.மு.க.வில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேனாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்கள் 10,000 பேர்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணையும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *