சென்னை, ஜன.24 “ஒன்றிய பாஜக.அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் சொல்லும் ‘டபுள் இன்ஜின்’ அல்ல; ‘டப்பா இன்ஜின்’ தமிழ்நாட்டில் ஓடாது. ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கள் நீங்கள் சொல்லும் ‘டபுள் இன்ஜின்’ மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகாரைவிட தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கருநாடகா, மேற்கு வங்கம் என உங்கள் ‘டப்பா இன்ஜின்’ நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது. தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும்
#NDABetraysTN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். டில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு தலைகுனியாது!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
