தமிழ்நாடு முழுவதும் 642 துணை சுகாதார நிலையங்கள் முதலமைச்சர் திறந்து வைக்கிறார் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.23 தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகய்யா மற்றும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோர் சுகாதாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துப் பேசியதாவது:

புதிய சுகாதார நிலையங்கள்

கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, தமிழ்நாடு முழுவதும் 642 இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இவற்றை இன்னும் 10 நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தென்னிலை கிராமத்தில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையப் பணிகள் விரைவில் முடிவடையும்.

பேராவூரணி மருத்துவமனை

பேராவூரணி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே ரூ.5 கோடி செலவில் மேற்கொள் ளப்பட்ட கட்டடப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இதனையும் முதலமைச்சர் விரைவில் திறந்து வைப்பார்.

கட்டமைப்பு வசதிகள்

அய்ந்தாயிரம் மக்கள் தொகை அடிப்படையில் ஒரு துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. பாபநாசம் தொகுதி வீரமாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தேவையான 25 கேவி மின்மாற்றி மற்றும் இதர மருத்துவ உபகரணங்களை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *