பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்: கவுண்ட் டவுன் தொடங்கியது

1 Min Read

இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

அரசியல்

சென்னை, ஏப்.22 பி.எஸ்.எல்.வி. சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி (போயம்) ஒரு சுற்றுப் பாதை தளமாக அறிவியல் சோதனைகளுக் காக பயன்படுத்தப்பட உள்ளது.  ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், சிறீஅரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று (22.4.2023) பகல் 2.19 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. 

இதில் இஸ்ரோவின் வணிக அமைப்பான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்.எஸ். அய்.எல்.) ஒப்பந்தத்தின் கீழ் நடத்தப்படும் வணிகப் பணியில், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 741 கிலோ எடை கொண்ட ‘டெலி யோஸ்-2’ என்ற பூமி கண்காணிப்பு செயற் கைக்கோள், இதனுடன் 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 என்ற 2 செயற் கைக்கோள்களை கிழக்கு நோக்கி குறைந்த சாய்வு சுற்றுப்பாதையில் ஏவப்படுகிறது. இதற்கிடையில், பி.எஸ்.எல்.வி. சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி (போயம்) ஒரு சுற்றுப் பாதை தளமாக அறிவியல் சோதனைகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டுக்கான 25 மணி 30 நிமிட கவுண்ட்டவுன் நேற்று (21.3.2023) பகல் 12.49 மணிக்கு தொடங்கியது. 

தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற் கைகோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின் றனர் என்று இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கூறினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *