‘மேக் இன் இந்தியா’ என்ன ஆயிற்று? 120 வந்தே பாரத் ரயில்கள்.!

Viduthalai
1 Min Read

ரஷ்ய நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தமாம்

அரசியல்

புதுடில்லி, ஏப் 22  ரஷ்யாவின் மிகப்பெரிய ரயில் இன்ஜின்கள் மற்றும் ரயில் உபகரணங்களை உற்பத்தி செய்யும் டிரான்ஸ்மாஷ் ஹோல்டிங் (ஜிவிபி) நிறுவனம், இந்திய இரயில்வேக்காக 120 வந்தே பாரத் விரைவு ரயில்களை தயாரித்து, வழங்குவது மற்றும் பராமரிப்பதற்கான உலகளாவிய ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவிற்கு 120 வந்தே பாரத் ரயில்களை தயாரிப்பதற்காக சுமார் 6.5 பில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அந்த ரஷ்ய நிறுவனம், ரயில் தயா ரித்து ஒப்படைக்க 1.8 பில்லியனும், 35 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகளுக்காக 2.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிடப்பட வில்லை எனவும், இந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதிக்குள் இந்திய ரயில்வே மற்றும் டி.எம்.எச். இடையே ஒப்பந்தம் கையெழுத்தா கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 16 பெட்டிகள் கொண்ட 120 வந்தே பாரத் ரயில்கள் ஒவ்வொன்றும் மகாராட்டிராவின்  லத்தூரில் உள்ள மராத்வாடா ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். ரயில்கள் 2026 மற்றும் 2030க்கு இடையில் வழங் கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இருப்பினும், முதல் இரண்டு மாதிரி ரயில்கள் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சோத னைக்கு தயாராகிவிடும் என கூறப்படுகிறது.

தற்போது, 14 வந்தே பாரத் எக்ஸ் பிரஸ் ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களை இணைக்கின்றன. அதில் ஒன்றாக, கேரளாவில் திரு வனந்தபுரம் – கண்ணூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 25-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

 மோடி ஆட்சிக்கு வந்தபிறகு 2015 ஆம் ஆண்டு மேக் இன் இந் தியா என்ற ஒரு மாயத் திட்டத்தை அறிவித்தார் அதாவது இனி உலகில் பல பொருட்கள் இந்தியாவிலிலிருந்து தாயாரிக்கப்படும் என்று – _ ஆனால் நடப்பதோ வேறு.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *