மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா வருகிறது

1 Min Read

அரசியல்

மதுரை, ஏப். 25-  மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.500 கோடி முதலீட்டில் மென் பொருள் நிறுவன கட்றீட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.

மதுரை நாகமலை புதுக் கோட்டை அருகிலுள்ள வடபழஞ்சியில் அரசு தகவல் தொழில் நுட்ப பூங்கா வளாகத் தில் அமெரிக் காவை சேர்ந்த டியோ மென்பொருள் தயாரிக்கும் நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டில் அமைக் கிறது. 

இதுதொடர்பாக அந்த நிறுவ னம் தமிழ்நாடு அரசிடம் ஏற் கெனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான புதிய அலுவலக கட்டடம் எல்காட் அலுவலக வளாகத்தில் அமைக்கப் படுகிறது. கட்டடப் பணிகளை  நிதிய மைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (24.4.2023) தொடங்கி வைத்தார்.

5 ஆயிரம் பேருக்கு வேலை:

அப்போது அமைச்சர் கூறும் போது, ‘இங்கு அமையும் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா மூலம் சுமார் 5 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதன்மூலம் இளைய தலைமுறையினரின் வாழ்க்கை மேம்பாடு அடையும். தமிழ்நாட்டில் தொழில் செய்ய வரும் தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசுஅனைத்து வித மான ஒத்துழைப்பையும் அளிக்கும்’ என்று குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *