டில்லி: காற்று மாசு பிரச்சினையை மெத்தனமாக கையாள்வதா? மேலாண்மைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டில்லி, ஜன.7– டில்லி காற்று மாசு வழக்கில் காற்றுத் தர மேலாண்மைக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரி வித்துள்ளது.

டில்லி என்சிஆர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க பழைய வாகனங்கள் டில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பாக்சி, விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் கொண்ட அமர் வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; காற்று மாசு பிரச்சினையை மிகவும் மெத்த னமாக கையாள்வதாக மேலாண் மைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

உடனடியாக வல்லுநர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டி விரிவான அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டனர். அறிக்கையை மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். காற்று மாசுக்கான காரணத்தை அறிவதில் வல்லுநர்கள் வேறுபடுவதாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு கருத்து தெரிவித்தது. தொடர் நடவடிக்கைகளுக்குப் பின்பும் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாக இருக்கிறது. பல ஆண்டுகளாக விசாரித்தும், வல்லுநர்கள் கருத்தை கேட்ட பின்பும் காற்றின் தரத்தில் முன்னேற்றம் இல்லை. நீண்டகால தீர்வை மறு ஆய்வு செய்ய கூறியும் மேலாண்மைக் குழு வெறும் நிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்துள்ளது.

மேலாண்மைக் குழு, காற்று மாசு பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்ததாக தெரியவில்லை. நீதிமன்றம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மேலாண்மைக் குழு எந்தப் பதிலும் அளிக்காத தால் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். காற்றின் தரம் மோசமாக இருப்பதற்கான காரணம் மற்றும் நிரந்தர தீர்வு காண்பதில் குழு தீவிரம் காட்டவில்லை. தீர்வை பரிந்துரைக்காமல், டில்லி மாநகராட்சி சுங்கச்சாவடி மூலம் வருவாய் ஈட்டுவதில் அக்கறை. வல்லுநர்கள் குழு கூட்டத்தை 2 வாரத்தில் கூட்டி காற்று மாசுக்கான காரணத்தை விவரிக்கும் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

2025 டிச.17இல் பிறப்பித்த உத்தரவில், உச்சநீதிமன்றம் சுங்கச்சாவடிகளை மூட உத்தர விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *