குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Viduthalai
1 Min Read

இந்தியா, தமிழ்நாடு

புதுடில்லி, ஏப். 28- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அழைப்பினை ஏற்று சென்னை, கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப் பீட்டில் கட்டப்பட் டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையை 5.6.2023 அன்று  இந்திய குடியரசுத் தலைவர் திறந்து வைக்கவுள்ளார்.  

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.4.2023) குடி யரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து, சென்னை, கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறந்து வைத்திட அழைப்பு விடுத்தார்.

முன்னதாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என‌ 3.6.2021 அன்று அறிவித்தார். 

சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக் கைகளுடன் கூடிய, சுமார்  51,429 சதுரமீட்டர் பரப்பளவில்  தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங் களுடன் 230 கோடி ரூபாய் செலவில் இப்பன் னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப் பட்டுள்ளது. இம்மருத் துவமனையின் கட்டுமா னப் பணிகள் நிறைவ டைந்த நிலையிலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவினை யொட்டியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இந் திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை மேற்கண்ட விழாக்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.  

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அழைப்பினை ஏற்று இந் திய குடியரசுத் தலைவர் 5.6.2023 அன்று சென்னை, கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப் பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவ மனை திறப்பு விழா மற் றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெ றவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில்  கலந்து கொள்ள இசைவளித்து உள்ளார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *