ஏழுமலையானுக்கு ‘அரோகரா’ திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 50 கிலோ தங்கத்தை காணவில்லை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருப்பதி, டிச.26- திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய கோயில்களில் திருப்பதி கோவிந்தராஜர் கோயிலும் ஒன்றாகும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது இந்த கோயிலின் விமான கோபுரத்துக்கு தங்கத் தகடுகள் (100 கிலோ) பதிக்கப் பட்டன. தற்போது கோயிலில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் விமான கோபுரத்தில் 50 கிலோ தங்கம் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2022-2023-ஆம் ஆண்டில் கோவிந்தராஜர் கோயில் விமான கோபுரத்தில் தங்கத் தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக திருப்பதி தேவஸ்தானம் 100 கிலோ தங்கத்தை வழங்கியது. 9 அடுக்கு தங்கத் தகடுகளை பதிக்க ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய பரிசோதனையில் 2 அடுக்கு தங்க தகடுகள் மட்டுமே பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் தங்கத் தகடுகளை பொருத்தியபோது விமான கோபுரத்தில் இருந்த சுமார் 30 சிலைகள் உடைக்கப்பட்டு உள்ளன. அப்போதைய அறங்காவலர் குழுத் தலைவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவுமான ஒய்.வி சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் இந்த விவகாரத்தை வெளியே வரவிடாமல் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது தங்கம் காணாமல் போன விவகாரம் குறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தங்கத் தகடுகள் பொருத்திய தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தப்பட உள்ளது.

ஏற்கனவே ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் கலந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் பரகாமணியில் ரூ.100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *