தமிழ்நாட்டில் மேகமூட்டமும், குளிர் பனியும் நீடிக்கும் டிசம்பர் 28இல் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 21– தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த மழைப்பொழிவு தணிந்துள்ள நிலையில், வரும் நாட்களில் உறைபனி மற்றும் வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

பனிமூட்டம் – குளிர்பனி

கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் மழையைத் தந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது குமரிக்கடல் பகுதி யிலிருந்து நகர்ந்து, இலங்கை மற்றும் நில நடுக்கோட்டுக்கு தெற்கே நிலை கொண்டுள்ளது. இது சுமத்ரா தீவுப் பகுதிக்குச் சென்று, அங்குள்ள காற்றுச் சுழற்சியுடன் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் நகர்வு காரணமாக வானிலையில் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படும்.

உள் மாவட்டங்கள்: கடலோரப் பகுதிகளில் லேசான பனிமூட்டம் இருந்தாலும், உள் மாவட்டங்களில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருக்கும்.

எல்லை மாவட்டங்கள்: கருநாடகா மற்றும் கேரள எல்லை மாவட்டங்களில் கடும் மூடுபனி நிலவும். சில இடங்களில் இது மேகமூட்டமாக மாறி மழையாகவும் பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி மாவட்ட உறைபனி: மேகங்கள் இல்லாத தெளிவான வானிலை நிலவும் போது, பனிப்பொழிவில் குளிர் காற்று நுழைந்தால் அது உறைபனியாக மாற வாய்ப்புள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் வரும் நாட்களில் உறைபனி நிலவக்கூடும்.

மழைக்கான வாய்ப்பு

(டிசம்பர் 25 – 28) இலங்கை அருகே ஏற்படும் மேக உருவாக்கம் காரணமாக வானிலை மீண்டும் மாறும்.

டிசம்பர் 25 – 27: தமிழ்நாட்டில் மேகமூட்டமும், குளிர் பனியும் நீடிக்கும்.

டிசம்பர் 28: உறைபனி விலகி, குளிர் காற்றுடன் கூடிய மேகமூட்டம் உருவாகி, மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 19.12.2025 முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *