நடப்பு ஆண்டில் 72 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

1 Min Read

புதுடில்லி, நவ. 7- இந்த ஆண்டு 72 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.   

டில்லியில் நடைபெற்ற இந் துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை பொறுத்தவரை, சட்டமியற்றும் அவையால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதற்கு இடையில் ஒரு கோடு உள்ளது.   ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தீர்ப்பு அளிக்கும் நீதிபதி, சட் டத்தில் பற்றாக்குறை இருப்பதாக சுட்டிக்கட்டினால், அந்த பற்றாக் குறையைச் சரிசெய்ய சட்டமி யற்றும் அவை ஒரு சட்டம் இயற் றலாம்.

ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறு என்று கூறி அதை சட்ட மியற்றும் அவையால் நேரடியாக ரத்து செய்ய முடியாது. நீதிபதிகள் வழக்குகளில் தீர்ப்பு அளிக்கும் போது, அரசியல்சாசன தார்மீக அடிப்படையில் வழிநடத்தப்படுகி றார்களே தவிர, பொதுமக்களின் தார்மீக அடிப்படையில் அல்ல. 

இந்த ஆண்டு சுமார் 72 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட் டுள்ளது. இன்னும் ஒன்றரை மாதம் பாக்கி இருக்கிறது. நீதித் துறையில் நுழைவு நிலையில் அமைப்பு ரீதியான தடைகள் உள் ளது உண்மை. இங்கு சரிசமமான வாய்ப்பு நிலவினால் மேலும் பல பெண்கள் இத்துறைக்கு வரு வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *