கவுகாத்தி, டிச.20 அசாம் மாநிலத்தில் ராஜஸ்தானி விரைவு ரயிலின் அய்ந்து பெட்டிகள் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், எட்டு யானைகள் உயிரிழந்தன.
அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் காம்பூர் பகுதியில் ராஜஸ்தான் விரைவு ரயிலின் அய்ந்து பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் எட்டு காட்டு யானைகள் உயிரிழந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வு இன்று (20.12.2025) அதிகாலை 2.17 மணிக்கு நிகழ்ந்துள்ளது.
யானைகள் கூட்டத்தை கவனித்த ரயில் ஓட்டுநர், ரயிலை அவசரமாக நிறுத்த முயற்சித்தார் . இருப்பினும் யானைகள் மீது ரயில் மோதி விட்டது. பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. பின்னர் தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள், மற்ற பெட்டிகளில் உள்ள காலியாக இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
தடம் புரண்ட பெட்டிகளை அப்புறப்படுத்திய பிறகு, ரயில் புறப்பட்டுச் சென்றது
