ஒன்றிய அரசுக்கு எதிராக டில்லியில் போராட்டம்: மம்தா அறிவிப்பு

Viduthalai
1 Min Read

அரசியல், இந்தியா


கொல்கத்தா, ஏப்.30
100 நாள் வேலைத் திட்டத்துக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கத் தவறினால், டில்லியில் மறியல் போராட்டம் நடத்துவோம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

மத்தியில் மன்மோகன்சிங் தலைமை யில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலை வழங்குகிற வகையில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தால் கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலை கிடைப்பது உறுதி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் முதலமைச்சர் மம்தா தலை மையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்துக்கு, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை என தெரிகிறது.

இதற்காக மம்தா கடந்த மாதம் கொல் கத்தாவில் 2 நாள் மறியல் போராட்டம் நடத்தினார். இந்தப் பிரச்சினை தொடர் பாக டில்லியிலும் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது. 

இதுபற்றிய அறிவிப்பை மெயினாகுரி என்ற இடத்தில் நேற்று (29.4.2023) நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் மம்தாவின் சகோதரர் மகன் அபிஷேக் எம்.பி., உரையாற்றும்போது வெளியிட்டார். 

அப்போது அவர் கூறியதாவது:- 

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு அளிப்பதில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போய் இருப்ப தால் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அமைச்சரை சந்திப்பதற்காக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டில் லிக்குச் சென்றேன். ஆனால், எங்களை அமைச்சர் சந்திக்கவில்லை. மேற்கு வங்காள மாநிலத்துக்கு மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்புறுதி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு கூடிய விரைவில் வழங்க வேண்டும். வழங்காவிட்டால் டில்லியில் நாங்கள் மறியல் போராட்டம் நடத்து வோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *