ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

1 Min Read

சிவகங்கை, மே 2 சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியில் செயல்பட்டு வரும் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் விடுதியில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்  திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம், அளவு, மேம்படுத்த வேண்டிய குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் விடுதியினை பராமரிக்கும் முறை, மாணவிகளின் வருகைப்பதிவு, தங்கி பயிலும் மாணவியர்களின் எண்ணிக்கை, மேம் படுத்த வேண்டிய வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர்கூறியதாவது:- மாணவிகள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே திட்டமிட்டு எதிர்கால லட்சியங்கள், நோக்கங்கள் குறித்து முழுமையாக அறிந்து செயல்பட வேண்டும். தங்களது குடும்ப சூழ்நிலையையும் பெற்றோர்களையும் மனதில் கொண்டு நல்லமுறையில் படிப்பதுடன், தனித்திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவிகள் தங்களது விளையாட்டுத்திறனை மேம்படுத்து வதற்கு, மாவட்ட விளையாட்டு துறையினருடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

மாணவிகள் வாசிப்புத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பாஸ்கரன், தனி வட்டாட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் விடுதிக்காப்பாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *