விமானத்தில் மயங்கி விழுந்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி, டிச.14– விமா னத்தில் மயங்கி விழுந்த பெண்ணின் உயிரை காப் பாற்றிய மருத்துவர்கள் க.இளவரசன், ச.கவுதம் ஆகியோருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

கடந்த நவ.22 ஆம் தேதி  டில்லியிலிருந்து திருச்சிக்கு வந்த இண்டிகோ விமானத்தில் இளம் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்பெண் விமானத்தின் கழிவறைக்குச் சென்ற பொழுது திடீரென அவர் மயங்கி விழுந்துவிட்டார். விமானப் பணிப் பெண்கள் அவரை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க முயன்றனர். அந்த முயற்சி பலனளிக்காததால் விமானத்தில் யாராவது மருத்துவர்கள் பயணிக்கிறீர்களா என்று கேட்டனர். அப்போது விமானத்தில் பயணித்த எம்.டி.சித்தா படிப்பை நிறைவு செய்த மருத்துவர் க.இளவரசன் மற்றும் இளநிலை சித்த மருத்துவர் ச.கவுதம் ஆகிய இருவரும் உடனடியாக வர்ம சிகிச்சை அளித்து அந்தப் பெண்ணை மயக்க நிலையிலிருந்து மீட்டனர்.  மருத்துவர்களின் இந்த செயலுக்கு விமானத்தில் பயணம் செய்தவர்களும் விமான சேவை நிறுவனத்தினரும் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். அலோபதி மருத்துவத்தைப் போல சித்த வர்ம சிகிச்சைகளும் அசாதாரண சூழல்களில் உயிர் காக்கக் கூடிய ஒன்றாக இருப்பதாக சித்த மருத்துவர்கள் தெரி வித்தனர்.

மருத்துவர்கள் க.இளவ ரசன், ச.கவுதம் ஆகிய இரு வரது செயல்களையும் ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்ய ராஜேஷ் கோட் டேச்சா நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரி வித்தார்.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில்  நடைபெற்ற (டிச.12) உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன், செயலர் மரு.செந் தில்குமார் மற்றும் மாநகர மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். அந் நிகழ்ச்சியில் விமானத்தில் பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு சிகிச்சை அளித் துக் காப்பாற்றிய சித்த மருத்துவர்கள் க.இளவர சன் மற்றும் ச.கவுதம் ஆகியோரைப் பாராட்டி சிறப்பித்தனர்.

இதில் மருத்துவர் இளவரசன் திருச்சி பெல் ம.ஆறுமுகத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *