கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.12.2025

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தி.மு.க.வுக்கு எதிராக சிபிஅய், ஈடி, அய்டி, தேர்தல் ஆணையம் என அனைத்தையும் பயன்படுத்து வார்கள்: நமது பலத்தை துல்லியமாக பயன்படுத்தி எதிர்கொள்வோம்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

* “பாஜகவின் திசை திருப்பும் தந்திரமே ‘வந்தே மாதரம்’ விவாதம்” – மக்களவையில் பிரியங்கா காந்தி சாடல்

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பிரிட்டிஷாருக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் எதிராக வந்தே மாதரம் பாடப்பட்டது: அறிஞர்களை மேற்கோள் காட்டி மக்களவையில் ஆ.ராசா அதிரடி பேச்சு. காந்தியா 1915 இல் இந்தப் பாடலைப் பாராட்டினார், ஆனால் 1940 இல் முஸ்லிம்களை புண்படுத்தும் நோக்கத்துடன் அதைப் பாடக்கூடாது என்று கூறியதாக ஆ.ராசா பேசினார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழக மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார்.

* நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கையெழுத்து திரட்டினர்

* தேர்வுகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் குறைபாடுகள் குறித்து தேசிய தேர்வு முகமை (NTA)-வை நாடாளுமன்றக் குழு கண்டித்து, பேனா மற்றும் காகிதத் தேர்வுகளுக்கு மாற வேண்டும் என பரிந்துரை.

தி இந்து:

* ஓபிசி பிரிவினருக்கு எதிரான சார்புகளை ஜாதி பாகுபாடாகக் கருத வேண்டும், என கல்வி குறித்த நாடாளுமன்ற குழு யுஜிசியிடம் பரிந்துரை; இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் நிலை நியமனங்களில் EWS இடஒதுக்கீட்டை “மறு மதிப்பீடு” செய்யுமாறும் அது அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறது.

 – குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *