நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்மீது நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருப்பரங்குன்றம் வழக்கில் சர்ச்சைக்குரிய உத்தரவைப் பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்ய முடிவு செய்தனர்.

அந்த அடிப்படையில் தி.மு.க. சார்பில் மக்களவையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் 120 பேரின் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.

இன்று நாடாளுமன்ற அலுவல்கள் தொடங்கும் முன்பு மக்களவைத் தலைவர் ஓம்.பிர்லாவிடம் தீர்மான மனு  வழங்கப்பட்டது.

அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரியங்கா காந்தி, கனிமொழி, டி.ஆர். பாலு, ஆ. இராசா,  அகிலேஷ், துரை வைகோ, திருமாவளவன் மற்றும் பலர் உடனிருந்தனர். ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் போலவே தன்னைக் காட்டிக் கொள்ளும் நீதிபதி  ஜி.ஆர். சுவாமிநாதன் பல்வேறு வழக்குகளிலும் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளையும், கருத்துகளையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *