வளரும் எழுத்தாளர்களுக்கான மூன்று நாள் மாநில பயிற்சிப் பட்டறை டிசம்பர் 12, 13, 14 – 2025

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், வாருங்கள் படைப்போம் குழுவினர் இணைந்து நடத்தும் இப் பயிற்சிப் பட்டறை வரும் டிசம்பர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற உள்ளது. மாணவர்களுக்கான பயிற்சியும், உணவும், உறைவிடமும் கட்டணமின்றி வழங்கப்படும்.

தங்களுடைய இருப்பிடத்திலிருந்து பயிற்சி நடக்கும் மதுரை தமிழ்ச் சங்க வளாகத்திற்கு (மருத்துவர் தங்கராசு சாலை, சட்டக் கல்லூரி அருகில், மதுரை – 625020) வருவதும், பயிற்சி முடிந்தவுடன் மீண்டும் தங்கள் இருப்பிடம் செல்வதும் மாணவர்களின் பொறுப்பு. 100 மாணவர்கள் மட்டுமே பயிற்சிக்காக அனுமதிக்கப்படுவார்கள். கூடுதலாக விண்ணப்பங்கள் வரும் கட்டத்தில், தேர்வு நடத்திப் பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்!

கூடுதல் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவேண்டிய கைப்பேசி எண் – 9486101547

இணைப்பு:: https://forms.gle/XcBDoWn1jTBPSC4L7

ம.கவிதா

மாநில துணைத் தலைவர்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

+919629520944

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *