வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டில்லி, டிச.3  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று (2.12.2025) எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முழுமையாக ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே இரண்டாவது நாளான இன்று எஸ்.அய்.ஆர். பணிகளுக்கு எதிராக இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுக்க இப்போது வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. முதலில் பீகார் தேர்தலுக்கு முன்பு இந்தப் பணிகள் நடத்தப்பட்டது. இதற்கிடையே இப்போது நாடு முழுக்க தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இந்தப் பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும், இது மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் இருப்பதாகச் சொல்லி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இப்போது நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று இதை வலியு றுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடு பட்டதால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே இரண்டாவது நாளான இன்று எஸ்.அய்.ஆர். பணிகளுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் அனைத்து எதிர்க் கட்சி உறுப்பினர்களும் இந்த ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றனர். எஸ்.அய்.ஆர். குறித்து நாடாளுமன்றத்தில் விவா திக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. எஸ்அய்ஆர் குறித்து மக்களவையில் விவாதிக்க பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *