‘‘திருப்பதி ஏழுமலையான் சக்தி’’ எங்கே? உண்டியல் காணிக்கை மோசடி! அதிகாரி மர்ம மரணம் காவல்துறையினர் விசாரணை

1 Min Read

திருப்பதி, நவ.17- திருப்பதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் மோசடியை கண்டறிந்த விஜிலன்ஸ் அதிகாரி சதீஸ்குமாரின் திடீர் மரணம் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. ஓடும் ரயிலில் இருந்து அவர் தள்ளிவிடப்பட்டாரா என்ற கோணத்தில் ஓடும் ரயிலில் இருந்து பொம்மை ஒன்றை தள்ளி காவல்துறையினர் குறிப்புகளை எடுத்துக்கொண்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணத்தை திருடிய வழக்கில் எழுத்தர் சி.வி. ரவிக்குமாரை அப்போதிருந்த விஜிலன்ஸ் அதிகாரியான சதீஸ்குமார் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். இவர் தற்போது தாடிபத்ரி ரயில்வே காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரந்த நிலையில், இந்த மோசடி குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்திவருகிறது. காவல்துறை கூடுதல் இயக்குநர் ரவிசங்கர் அய்யனார் தலைமையில் இந்த விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராக சதீஸ்குமார் தாடிபத்ரி- திருப்பதி ரயிலில் நேற்று முன்தினம்  (15.11.2025) இரவு 12 மணியளவில் புறப்பட்டார். மறுநாள் காலை தாடிபத்ரி- குத்தி மார்க்கத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே அவரது சடலம் கண்டெடுக்கப் பட்டது. இதனை அடுத்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். சதீஸ்குமார் கொலை செய்யப் பட்டாரா அல்லது, தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத் தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றார்.

இந்த நிலையில் சதீஸ்குமார் இறந்த சம்பவத்தை மறுகாட்சி அமைக்கும் விதமாக ஓடும் ரயிலில் இருந்து பொம்மைகளை தூக்கிவீசி டிரோன் கேமரா உள்ளிட்ட பல்வேறு கேமராக்களில் பதிவு செய்யப்பட்டது. இந்த காட்சிகளை வைத்து வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடைபெறும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *