பாட்னா, நவ.4 பீகார் மாநில சட்ட மன்றத்திற்கு 2 கட்டமாக நவ.6 மற்றும் 11 ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு நிதிஷ்குமார் தலைமையில் அய்க்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரு கிறது.
ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர மாக பணியாற்றி வருகிறது.
மகாபந்தன் கூட்டணி
ஆட்சியைக் கைப்பற்றும் வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின்
ஆர்.ஜே.டி-காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தனியார் செய்தி தொலைக்காட்சி அலைவரிசைக்கு தேஜஸ்வி யாதவ் பேட்டி அளித்தார்.
அந்தப் பேட்டியில், இந்தியா வின் சிறந்த முதலமைச்சராக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்? சிலர் இன்னமும் மோடிஜியின் பெயரையும் சொல்கிறார்கள். சிலர் முலாயம் சிங்கின் பெயரைச் சொல்கிறார்கள். சிலர் அகிலேஷ் பெயரையும் சொல்கிறார்கள். சிலர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரையும் சொல்கி றார்கள். ஆகையால் இப்போது இருப்பவர்களில் யார் சிறந்த முதலமைச்சர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த தேஜஸ்வி, ‘‘இப்போது இருப்பவர்க ளில் எனக்கு மு.க. ஸ்டாலின் என்று தோன்றுகிறது. நம்முடைய (பீகார்) முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளைக் கொண்டு வருவதை நான் பார்க்கவில்லை. முதலீட்டைக் கொண்டு ருவதற்காக அவர் எதுவும் செய்வதில்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் அவர்கள் முயற்சி செய்கிறார். அவர் முதலீட்டா ளர்கள் மாநாடுகளை நடத்துகிறார், முதலீடுகளைக் கொண்டு வருகிறார்’’ என்று தெரிவித்தார்.
இந்தக் காட்சிப் பதிவை திமுக வினர் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
