S.I.R. என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டத்திற்கு எதிராகப் போராட – தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு!
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைய மனதில் வைத்து, அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும்!
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைய மனதில் வைத்து, அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும்!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டறிக்கை!
- S.I.R. என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டத்திற்கு எதிராகப் போராட – தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு! தமிழ்நாட்டின் எதிர்காலத்தைய மனதில் வைத்து, அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும்!
- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டறிக்கை!
- சந்தேகத்துக்குரிய தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது
- உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத தேர்தல் ஆணையம்!
- ஆதார் அட்டையை முழுமையான ஆவணமாக ஏற்க மறுப்பது ஏன்?
- நவ. 2 இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்
சென்னை, அக்.28– SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டத்திற்கு எதிராக போராடிட தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் – 2 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்றிட ‘மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி’த் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
அதன் விவரம் வருமாறு:–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (27.10.2025) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், ஒன்றிய அரசின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision) குறித்து தோழமைக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, என்.ஆர். இளங்கோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்மு. வீரபாண்டி யன், முன்னாள் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ் கனி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான த. வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் ஜெயினுலாபுதீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்பொதுச் செயலாளர் அபூபக்கர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் செல்வராஜ், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் அருணாச்சலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அனைத்துக் கட்சித் தலைவர்கள் சார்பில் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:–
மக்களாட்சி மாண்பைச் சிதைப்பதையும், ஜனநாய கத்தை சின்னாபின்னப் படுத்துவதையும் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்வதே ஒன்றிய பா.ஜ.க. அரசின் வழக்கமான பழக்கம் ஆகும். அதற்கு ஏற்ப தன்னாட்சி பெற்ற அமைப்புகளையும் தங்களது விருப்பத்துக்கு வளைத்துச் செயல்படுத்தி வருகிறது.
சந்தேகத்துக்குரிய தேர்தலை
தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது
தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது
குறிப்பாகத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சர்ச்சைக்குரியவையாக மட்டுமல்ல, சந்தேகத்துக்குரியவையாக இருக்கின்றன. முறையான தேர்தல், வெளிப்படையான தேர்தல், நேர்மையான தேர்தல், உண்மையான தேர்தல் நடத்துவதுதான். தேர்தல் ஆணையத்தின் ஒரே பணியாகும். ஆனால், சமீபகாலமாக தங்களுக்கு விருப்பமான உத்தரவுகள் மூலமாக சந்தே கத்துக்குரிய தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இதற்கு வெளிப்படையான உதாரணமாக பீகார் தேர்தல் அமைந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தமானது, உண்மையான வாக்கா ளர்களை நீக்குவதற்கான சதியாக மட்டுமே அமைந்தி ருந்தது என்பதைக் கண்டோம்.
உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத தேர்தல் ஆணையம்!
நம்பிக்கைக்குரிய தகவல்களின்படி பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள். பின்னர், சில லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மாண்பமை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவையே தேர்தல் ஆணையம் மதிக்க வில்லை. பின்பற்றவில்லை. செயல்படுத்தத் தயாராக இல்லை. இந்த ஜனநாயக விரோதச் செயலைச் செய்யத் தூண்டியது ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆகும்.
இந்த நிலையில் SIR என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர், தமிழ்நாட்டுக்கான தேதிகளை அறிவித்துள்ளார்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதுபோன்ற பணிகளை நடத்துவது என்பது மிகமிகச் சிரமம் ஆகும். வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் குறித்த இது போன்ற மிகப்பெரிய பணிகளைச் செய்வது சிரமம் ஆகும். நடைமுறைச் சாத்தியம் இல்லாத காலத்தை தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது. “ஒளிப்படம் ஒட்டித் தர வேண்டும், பழைய வாக்காளர் பட்டியலை இணைய தளத்தில் பார்த்து இணைக்க வேண்டும்” என்று சொல்வது எல்லாம் பெரும்பான்மை வாக்காளர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும்.
ஆதார் அட்டையை முழுமையான ஆவணமாக ஏற்க மறுப்பது ஏன்?
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆதார் அட்டையை முழுமையான ஆவணமாக ஏற்க மறுப்பது ஏன்? குடும்ப அடையாள அட்டைகளை முழுமையான ஆவணமாக ஏற்க வேண்டும் என்று நாங்கள் இதுவரை வைத்த கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன்?
வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், அதனை அவசர அவசரமாகச் செய்யக் கூடாது. கால அவகாசம் கொடுத்துச் செய்ய வேண்டும். நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் செய்ய வேண்டும். ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போது இதனைச் செய்யத் தொடங்குவது சரியானது அல்ல. முறையானது அல்ல. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சீர்திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.
SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் இதனுள் இருக்கலாம் எனச் சந்தேகப்படுகிறோம். பீகாரில் இசுலாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்கள் என்று குறிவைத்து இந்த நீக்கம் நடந்தன. பீகாரில் ஒரே தொகுதியில் 80,000 இசுலாமியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடந்ததாக மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் அவர்கள் குற்றம்சாட்டினார். இது போன்ற எந்தச் சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது. தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். போராட வேண்டும்.
நவ. 2 இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்
இது தமிழ்நாட்டுக்கான பிரச்சினை ஆகும். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் இயக்கங்களும் இதனை உன்னிப்பாக கண்காணித்து தடுத்தாக வேண்டும். எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2 – ஞாயிறு அன்று காலை 10 மணி அளவில், தியாகராய நகரில் உள்ள “ஓட்டல் அகார்டில்” நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
அக்கூட்டத்தில் தலைவர்கள் வைக்கும் கோரிக்கைகள், ஆலோசனைகள் அடிப்படையில் நமது அடுத்த கட்ட செயல்பாடுகள் அமையும் என உறுதி அளிக்கிறோம்.
மக்களாட்சியையும், மக்களின் உரிமைகளையும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் மனதில் வைத்து, அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
