ஏ.டி.ஜி. கவுதமன் மறைவிற்கு இரங்கல்!

1 Min Read

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும் , சுயமரியாதைச் சுடரொளியுமான மறைந்த மானமிகு ஏ.டி. கோபால் – சந்திரா ஆகியோரின் மூத்த மகன் ஏ.டி.ஜி. கவுதமன் இன்று (25.10.2025) காலை திருப்பத்தூரில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழகம் நடத்திய அனைத்துக் கூட்டங்களிலும், மாநாடுகளிலும் தவறாமல் கலந்து கொண்டவர்.

திருப்பத்தூர் நகர பகுத்தறிவாளர் கழக அமைப்பாளராகவும் பணியாற்றியவர்.

அவர் உடல் மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்டது.

அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
25.10.2025

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *