சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றம்

சித்த மருத்துவப் பல்கலைக் கழக மசோதா
ஆளுநர் ஆர்.என்.ரவியின் பரிந்துரைகள் நிராகரிப்பு!

சென்னை, அக்.18  சித்த மருத்துவப் பல்கலைக் கழக சட்ட முன்வடிவை பேரவையில் ஆய்வு செய்வதற்கு ஆளுநர் ரவி அனுப்பியுள்ள செய்தி யில் இருக்கக் கூடிய கருத்தை நிராகரித்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

சித்த மருத்துவ சட்ட மசோதா

தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதா ஏற்கெனவே  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருந்தது. அந்த மசோதா, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், அவர் அதை அனுமதிக்கவில்லை என்ற நிலையில், அந்த மசோதாவை அரசு திரும்பப் பெற்றிருந்தது. இந்த நிலையில், சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்தை உருவாக்குவதற்காக – மற்றொரு மசோதாவை அறிமுகம் செய்ய  16.10.2025 அன்று  சட்டப்பேர வையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அனுமதி கோரினார்.

அந்த மசோதாவுக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:

இச்சட்டமுன்வடிவு சம்பந்தமான ஒரு செய்தியை பேரவையின் முன்வைக்க விரும்புகிறேன். தமிழ்நாடு சித்த மருத்து வப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவானது, நிதிச் சட்டமுன்வடிவு என்கிற வகைப்பாட்டில் வரு கின்ற காரணத்தால் இச்சட்டமுன்வடிவினைப் பேரவையில் ஆய்வுசெய்வதற்கு அரசமைப்புச் சட்டம், கூறு207(3)-இன்கீழ் ஆளுநர் அவர்களின் பரிந்துரை பெறப்பட வேண்டும்.

நடைமுறைகளை பின்பற்றாத ஆளுநர்!

பொதுமக்களின் கருத்தை அறிந்து, வரப்பெற்ற கோரிக்கைகளைக் கவனத்தில்கொண்டு, மக்களாட்சியின் ஒரு தூணாகக் கருதப்படும் நிருவாகத்தால், மக்கள் நல்வாழ்வுத் துறையால் வரைவு சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டு, சட்டத் துறையால் சரிபார்க்கப்பட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களால் பல கட்டங்களில் பரிசீலிக்கப்பட்டு, மேற்காணும் சட்டமுன்வடிவின் அச்சடிக்கப்பட்ட பிரதி ஆளுநருக்கு இணைத்து அனுப்பப்பட்டது.

ஆனால், ஆளுநர் அவர்கள் அரசமைப்புச் சட்டத்தின்படி பின்பற்றப்பட்டுவந்த வழக்க மான நடைமுறையைப் பின்பற்றாமல், இச்சட்டமுன்வடிவில் உள்ள சில பிரிவுகள் குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார். அந்தக் கருத்துகள் இச்சட்டமுன்வடிவு பேர வையில் அறிமுகப்படுத்தப்படுகையில் பேரவை உறுப்பினர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று தன்னு டைய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

விதிகளுக்கு முரணான ஆளுநரின் கருத்து!

இது அரசியல் சட்டத்திற்கும், நமது சட்டப் பேரவை விதிமுறைகளுக்கும் முர ணானது. ஒரு சட்டமுன்வடிவு பேரவை யில் விவாதிக்கப்படுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பி னர்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழியவும், அதற்கான விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் திருத்தங் களைத் திரும்பப் பெறவும், இல்லையெனில், வாக்கெடுப்பைக் கோரவும் அதிகாரம் உள்ளது.

இத்தகைய சட்டமுன்வடிவு பேரவையால் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன்மீது கருத்துகளைத் தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநர் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.எனவே, ஆளுநர் அவர்களிடமிருந்து வரப்பெற்றுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துகளை இந்த மாமன்றம் ஏற்றுக்கொள்ள இயலாது.

மேலும், “Consideration” என்று சொல்ல வேண்டிய ஆளுநர், அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக “Appropriate Consideration” என்றுகுறிப்பிட்டுள்ளார். இதில், “Appropriate” எனும் வார்த்தைக்கு என்ன பொருள்?“பொருத்தமான” அல்லது “தகுந்த”முறையில் ஆய்வு செய்ய வேண்டும்” என்று பொருள்.

பேரவையின் மாண்பை குறைக்கக் கூடியது!

இப்பேரவை சட்டமுன்வடிவுகளை “பொருத்தமற்ற முறையில்” அல்லது “தகுந்த முறையில் அல்லாமல்” ஆய்வு செய்யும் தொனியில், “பொருத்தமான” அல்லது “தகுந்த” எனும் பொருள்படக் கூடிய வார்த்தையை சேர்த்திருப்பது, இந்தப் பேரவையின் மாண்பை குறைக்கக்கூடிய கருத்து என்பதால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

சட்டம் இயற்றுவது, இப்பேரவைக்கு மட்டுமேஉள்ள அதிகாரம்.ஆகவே, ஆளுநர் அவர்களிடமிருந்துவரப்பெற்றுள்ள அந்தக் கருத்துகள் அடங்கிய செய்தி அவைக் குறிப்பில் இடம் பெறுவதை மாநில சுயாட்சியில் நம்பிக்கை கொண்டஎந்த ஓர் உறுப்பினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கிற காரணத்தால், அந்தக் கருத்துகளை நான் இங்கே பதிவுசெய்ய விரும்பவில்லை.

எனவே, “2025 ஆம் ஆண்டு தமிழ்நாடுசித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவை பேரவையில் ஆய்வு செய்வதற்கு ஆளுநர் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் (Message) இருக்கக்கூடிய அவரின் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்கக் கூடிய அந்த வார்த்தை அடங்கிய பகுதிகளை இப்பேரவை நிராகரிக்கிறது” – என்னும் தீர்மா னத்தை மொழிகிறேன்.

உறுப்பினர்கள் அனைவரும்இதனை ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் கேட்டு அமைகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரவையில் உரையாற்றினார்.

ஒருமனதாக நிறைவேறியது

அதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்புக்கு பேரவைத் தலைவர் அப்பாவு விட்டார். தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து குரல் கொடுத்தனர்.

மற்ற கட்சி உறுப்பினர்கள் யாருமே அந்தத் தீர்மானத்தை ஆதரித்தோ அல்லது குரல் எழுப்பாமல் மவுனம் காத்தனர். எனவே, முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக பேரவைத் தலைவர் அ்பபாவு அறிவித்தார்.

அதன் பின்னர் அந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *