கிரேட்டா தன்பெர்க் ஒரு நல்ல மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்” – டிரம்ப் கிண்டல் டிரம்ப்புக்கும் இதே பிரச்சினை இருக்கிறது – கிரேட்டா பதிலடி

1 Min Read

வாசிங்டன், அக்.9- சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் (வயது 22), பருவநிலை மாற்றம் குறித்து பன்னாட்டு அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தனது சிறு வயதில் இருந்தே சமூக ஆர்வலராக வலம் வரும் கிரேட்டா தன்பெர்க், உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.

இந்தநிலையில் கிரேட்டா தன்பெர்க் இஸ்ரேல் தாக்குதலால் சின் னாபின்னமான காசாவுக்கு கப்பல் மூலமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கிரேட்டா தன்பெர்க் கொண்டு சென்றார். அவருடன் பல நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் சென்றனர். அப்போது அவர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் இடைமறித்து சிறைவைக்க ப்பட்டு, அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இதுதொடர்பாக கிரெட் டா தன்பெர்க் சுவீடனில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இஸ்ரேல் ராணுவம் தங்களை மிகவும் மோசமாக நடத்தியது என்று அவர் தெரிவித்தார். இருப்பினும் இதனை இஸ்ரேல் ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த நிலையில் கிரேட்டாவின் நடவடிக் கைகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். அவர், “கிரெட்டா தன்பெர்க் ஒரு பைத்தியம்போல செயல்படுகிறார். எப் போதும் மூர்க்கமாக உள்ளார். பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். அவர் நல்ல ஒரு மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்” என்று கிண்டலாக தெரிவித் துள்ளார்.

அதே சமயம், டிரம்ப்புக்கும் இதே பிரச்சினை இருக்கிறது என்று கிரேட்டா தன்பெர்க் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “கோபத்தை கட்டுப்படுத்துவது குறித்து டிரம்ப்பிடம் ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் நான் அதை ஏற்றுக்கொள்வேன்.

ஆனால் அவரது கடந்தகால செயல் பாடுகளைப் பார்த்தால் அவருக்கும் இதே பிரச்சினை இருப்பதாக தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *