லடாக்கின் குரலை ஒடுக்க இளைஞர்களைக் கொன்று பதிலடி கொடுத்துள்ளது பாஜக!

1 Min Read

– ராகுல் காந்தி

புதுடில்லி, செப்.29 லடாக் யூனியன் பிர தேசத்துக்கு தனி மாநிலத் தகுதி  மற்றும் அரசியல் அமைப்பில் 6 ஆவது அட்ட வணையில் இடம் கோரி கடந்த வாரம் வெடித்த இளைஞர்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் வன்முறையை தூண்டியதாக கால நிலை செயல்பாட்டாளர்கள் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இது குறித்து ராகுல் காந்தி  வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில்,

லடாக்கின் அற்புதமான மக்கள், கலாச்சாரம் மற்றும் மரபுகள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியோரால் தாக்கப்படுகின்றன.

லடாக்கியர்கள் தங்களுக்கென ஒரு குரல் வேண்டும் என்று கோரினர். ஆனால் அதற்கு பாஜக, 4 இளைஞர்களை கொன்றும் சோனம் வாங்க்சுக்கை சிறையிலடைத்தும் பதிலடி அளித்துள்ளது.

கொலையை நிறுத்துங்கள். வன் முறையை நிறுத்துங்கள். லடாக்குக்கு ஒரு குரல் வேண்டும், அதனை வழங்குங்கள். அவர்களுக்கு அரசமைப்பின் 6 ஆவது அட்டவணையை வழங்குங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *