உடல்கொடை செய்பவர்களை சிறப்பிக்க மதிப்புச்சுவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

1 Min Read

சென்னை, செப்.13-          சென்னை கோடம் பாக்கம், மேற்கு ஜோன்ஸ் சாலை பகுதியில் உள்ள மயான பூமியின் மேம்பாட்டு பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரம ணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- உடல் உறுப்பு கொடை செய்வதில் தமிழ்நாடு உலகத்திற்கே முன்மாதிரி யாக உள்ளது. மூளைச் சாவு அடைந்து உடலுறுப்பு கொடை வழங்கியவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு பின்னர் இதுவரை 513 கொடையாளர்கள் உடலுறுப்பு கொடை வழங்கி இருக்கிறார்கள். 2 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்டோர் உடலுறுப்பு கொடை செய்திருப்பது வரலாற்று சாதனை. அவர்களை மேலும் சிறப்பிக்கும் வகையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் “வால் ஆப் ஹானர்” என்ற மதிப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை மூளைச் சாவு அடைந்து உடலுறுப்பு கொடை செய்தவர்களின் பெயர்களை இதில் பதிய வைக்கும் பணி நிறைவுற்று வருகிற 30ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரசு மருத்துவமனைகளிலும் “வால் ஆப் ஹானர்” செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உட லுறுப்பு கொடை செய்தவர்களின் பெயர்கள் அந்தந்த மருத்துவமனைகளில் உள்ள சுவர்களில் நிலைத்திருக்கும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *