இக்னோ பல்கலை. தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை: ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, மே 30 – இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக் குநர் கே.பன் னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய் திக் குறிப்பு: 

ஒன்றிய அரசின் இக்னோ பல்கலைக் கழ கம், தொலைதூரக் கல்வி வாயிலாக பல்வேறு இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான் றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. 

தற்போது 2023 ஜூலை பருவத்துக்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் தொடங்கப்பட்டுள்ளது.

தொலைதூரக் கல்வி மற்றும் இணைய வழி படிப்புகளில் சேர விரும்புவோர்  www.ignouadmission.samarth.edu.in (தொலை தூரக் கல்வி படிப்புகள்), www.ignouiop.samarth.edu.in (ஆன்லைன் வழி படிப்புகள்) ஆகிய இணைய தளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

அனைத்து படிப்பு களுக்கும் இணைய வழி யில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30-ஆம் தேதி ஆகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *