‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் 54 ஆயிரம் பேர் பயன்பெற்றனர்

1 Min Read

சென்னை, செப். 8- தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் `நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை கடந்த மாதம் 2ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து வாரம் தோறும் சனிக் கிழமைகளில் முகாம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 5ஆவது வாரமாக நேற்று முன்தினம் (6.9.2025) 35 மாவட்டங்களில் 35 இடங்களில் நடந்த முகாம்களில் 54,350 பேர் பயனடைந்தனர். இதுவரை நடைபெற்ற 5 முகாம்களில் 2.61 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.
இந்த முகாம்களில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், குழந்தைகள் நலம் சார்ந்த ஆலோசனைகள் மருத்துவ நிபுணர்களை கொண்டு வழங்கப்படுகிறது. பரிசோதனைகள் மட்டுமின்றி, மருத்துவ காப்பீட்டு பதிவு, மாற்றுத் திறனாளி அங்கீகார சான்றிதழ் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *