ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 30.5.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* சந்தேகத்திற்குரிய ஒரு வரலாற்று  அர்த்தமற்ற சடங்கை மீண்டும் செயல்படுத்துவது, என்பது இப்போது இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கிய மைல் கல்லாக மோடியால் மாற்றப்பட்டுள்ளது என்கிறார் பர்சா வெங்கடேஷ்வர ராவ் ஜூனியர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மணிப்பூர் வன்முறை குறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையிலான குழு குடியரசுத் தலைவரை சந்தித்து புகார் மனு அளித்திட உள்ளனர்.

தி இந்து:

* நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் மதச் சடங்குகளை நடத்தி இந்திய குடியரசை ஒரு புதிய மறுமுறைக்கு மாற்றுவதற்கான வேட்கையை விழாவின் பாணியிலும் பொருளிலும் தெளிவாக மோடி அரசு உணர்த்தியுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் டில்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் ராகுலை சந்தித்து ராஜஸ்தான் தேர்தலில் ஒன்றாக செயல்படுவோம் என்று உறுதியளித்தனர்.

* இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், 230 இடங்களில் காங்கிரஸ் 150 இடங்களை கைப்பற்றும் என ராகுல் உறுதி.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *