பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது

1 Min Read

திருச்சி, செப். 7– பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 5.9.2025 அன்று ஆசிரியர் நாள் விழா உற்சாகமாக கொண்டா டப்பட்டது.

பள்ளி முதல்வர் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு மாண வர்கள் தங்களின் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாடல்கள், கவிதைகள், நாடகங்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகளை வழங்கினர். ஆசிரியர்களுக்கான சிறப்பு, நினைவுப் பரிசுகளும், பள்ளி நூலகத்திற்கு 7000 ரூபாய் மதிப்புள்ள நூல்களை ஆசிரியர் தின நினைவுப் பரிசாக  வழங்கினர்.

மாணவர்கள் ஆசிரியர் களுக்காக ஏற்பாடு செய்த சிறப்பு நிகழ்ச்சிகள் அனை வரையும் கவர்ந்தன. ஆசிரியர் களின் உழைப்பையும், அர்ப் பணிப்பையும் மதிக்கும் விதமாக மாணவர்கள் உரையாற்றி அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.விழாவின் இறுதியில் முதல்வர் நன்றி கூறி, ஆசிரியர்களின் பங்களிப்பு மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு பெரும் வழிகாட்டியாக இருப்பதை வலியுறுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *