கேரளா, “கடவுளின் தேசம்” (God’s Own Country) ஆனது எப்படி?

1 Min Read

கேரளாவில் இன்றும் நாம் சென்றால், “கடவுளின் தேசம்” (God’s own country) என்ற வரவேற்புப் பலகைகளைக் காணலாம். பசுமைக் காடுகளும், சலசலத்து ஓடும் அருவிகளும், நீல வண்ண மலைச் சிகரங்களும், வண்ண மலர் கூட்டங்களும் நிறைந்த இயற்கை வளத்தால் அந்தப் பெயர் என்று நாம் பலரும் நினைப்போம். ஆனால், மன்னர் மார்த்தாண்ட வர்மன் ஜனவரி 1750ஆம் அண்டு தன்னுடைய நாட்டை திருவனந்தபுரம் பத்நாபபுரம் பத்மநாபசாமிக்கு கொடையாகக் கொடுத்துவிட்டார். அரசர் “துணை ஆட்சியாளராக” (Vice Regent) இருப்பதாக ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டு கோயிலுக்குக் கொடுத்துவிட்டார். அதனால்தான் அது “கடவுளின் தேசம்” என்றானதாம். பத்மநாப சாமிக் கோயிலின் கோபுரத்தின் நான்கு மாடிகள் இவர் கட்டினார். கருவறைக்கு மூன்று வாசல்கள் – பக்கம், பக்கமாக இருக்கும் பத்மநாபசாமியின் பெரிய சிலை, படுத்திருக்கும் நிலையில் மூன்ற வாசல்களிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். மார்த்தாண்ட வர்மன் இந்தக் கோயிலைப் புதுப்பித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *