குருவரெட்டியூர் ப.பிரகலாதனின் நினைவுநாள்

1 Min Read

திராவிடர் கழகம்

குருவரெட்டியூர், நவ. 10- ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளிப. பிரகலாதன் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவுநாளில் (09.11.2023) ஊர் பொது மக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், கழகத்தோழர்கள் கலந்துகொண்டு தந்தை பெரியார் சிலைக்கு அருகில் அவரது படம் வைக்கப்பட்டு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், நகர தலைவர் ப.சத்தியமூர்த்தி, செயலாளர் ந.கிருட்டிணமூர்த்தி, ஈரோடு மாநகர தலைவர் கோ.திருநாவுக்கரசு, தங்கமுத்து, பவானி அசோக் குமார், லோகநாதன், பி.மணிமாறன், பென் ஜான்சன், கௌசிகன், சஞ்சய், அனுசியா, கார்த்தி, ஈஸ்வரி, ஜீவா, மாதம்மாள், குள்ளம் மாள், தட்சிணாமூர்த்தி, அரிகிருஷ்ணன், விஜயன், ஊராட்சி மன்ற தலைவர் அசோக் குமார், காங்கிரஸ் விஜய்குமார், சமூக ஆர்வலர் தைரியமணி, தி.மு.க வைச்சார்ந்த கலைவாணன், ப. அர்சசுணன், திருச்சந்திரன்,ப.க.பாலசுப்பிரமணியன், தி.வி.க வைச் சேர்ந்த வேல்முருகன், ராமு, திலீப், தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சார்ந்த வேங்கை பொன்னுசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *