ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு 5 ஆண்டுக்கு இழப்பீடு வேண்டும் காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தல்

1 Min Read

புதுடில்லி, செப்.5 காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக ஜிஎஸ்டியை எளிமைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வருகிறது. மோடி அரசு, ஒரு நாடு ஒரு வரி என்பதை ஒரு நாடு 9 வரிகள் என மாற்றியது. அதில், 0%, 5%, 12%, 18%, 28% மற்றும் 0.25%, 1.5%, 3% மற்றும் 6% என்ற சிறப்பு வரி விகிதங்களும் அடங்கும். 2019 மற்றும் 2024 தேர்தல் அறிக்கையில் எளிமையான ஜிஎஸ்டி 2.0-அய் காங்கிரஸ் கோரியிருந்தது.

மொத்த ஜிஎஸ்டியில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 64% வசூல் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பைகளில் இருந்து வருகிறது. ஆனால், பெரும் பணக்காரர்களிடமிருந்து 3% வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

அதேநேரம், அவர்களுக்கு சாதகமாக கார்ப்பரேட் வரி விகிதம் 30%-லிருந்து 22- சதவீதமாக குறைக்கப்பட்டது. 8 ஆண்டுகளாக தூக்கத்தில் இருந்த மோடி அரசு தற்போது விழித்துக்கொண்டு ஜிஎஸ்டியை மறுசீரமைத்துள்ளது. இது ஒரு நல்ல விஷயம். அதேநேரம், ஜிஎஸ்டி குறைப்பால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு அந்த இழப்பை ஒன்றிய அரசு 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்டும்” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *