‘விடுதலை’ நாளிதழ் பிறந்தநாள் வெண்பா

Viduthalai
0 Min Read

(இரு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பா)

விடுதலை என்னும் பெரியாரின் பிள்ளை,

கெடுதலை நீக்கி, நம் மானம் – நடுதலை,

நாளெல்லாம் ஆற்றும் திராவிட நாளிதழால், 

கோளெல்லாம் பாய்ந்த ஒளி! (1)

வீரமணி என்னும் விளக்கு ஒளிதன்னில், 

காரமணி தன்மான வித்திட்டு – ஆரமணி 

வீசும் இதழாம், விடுதலை தந்ததே

‘ஆசிரியர்’ என்னும் அடைவு ! (2)

பிறந்தநாள் ஏட்டுக்கா? வீட்டுக்கா? என்றால்,

பிறந்தநம் வீட்டுக்கே இன்பம்! – பிறந்ததே,

மானம் பகுத்தறிவு நீதி, விடுதலையால்

ஆனதே நந்தமிழ் நாடு! (3)

பேரா. கண்ணபிரான் இரவிசங்கர், 

பாரீசு (பிரான்சு).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *