சூப்பர் முதலமைச்சராக ஆளுநர் செயல்பட முடியாது உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஆக. 29– சூப்பர் முதலமைச்சராக ஆளுநர் செயல்பட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப் பட்டது.

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் செய்தது தொடர்பாக அரசியலமைப்பு சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் 14 கேள்விகள் எழுப்பியுள்ளார். தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி சூர்யகாந்த் உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

நேற்று நடந்த வாதம்

ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: ஒன்றிய அரசுக்கு எதிராக மாநில அரசு ரிட் மனு தாக்கல் செய்ய முடியுமா? ஆளுநர், குடியரசுத் தலைவரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியுமா? என்பன போன்ற கேள்விகளை குடியரசுத் தலைவர் கேட்டுள்ளார். அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி ஒன்றிய அரசுக்கு எதிராக மாநில அரசு ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது. ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்சனைகளை வேறு வகையில்தான் தீர்வு காண முடியும். ஆளுநருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது. அதேபோலத்தான் உச்ச நீதிமன்றத்திலும் ஆளுநருக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்து உத்தரவு கோர முடியாது.

துஷார் மேத்தா: மாநில அமைச்சரவை ஆலோசனைப்படி ஆளுநர் செயல்படுகிறாரே தவிர, ஒன்றிய அமைச்சரவையின் ஆலோச னைப்படி அல்ல. இருப்பினும், அவர் குடியரசுத் தலைவருக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர். உச்ச நீதிமன்றத்தில் பெரும்பாலான வழக்குகளில் ஆளுநர்களுக்காக ஒன்றிய அரசே ஆஜராகி வாதிடு கிறது. மாநில அரசின் நிர்வாக அதி காரங்கள் ஆளுநர்களிடம் உள்ளன. எனவே, ஆளுநர் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு மாநில அரசு ரிட் மனு மூலம் தீர்வு காண முடியாது.

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி: மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்குஅனுப்புவதாக இருந்தாலும் அமைச்சரவையின் ஆலோசனைப்படியே செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. ஆளுநர் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். அதேபோல, மாநில அரசை கட்டுப்படுத்தும் சூப்பர் முதல்வராகவும் ஆளுநர் இருக்க முடியாது. ஆளுநரும், முதலமைச்சரும் இருமுனை கத்திகள் போல எதிர் எதிர் துருவங்களாக செயல்பட முடியாது.

தலைமை நீதிபதி: ஒன்றிய அரசின் சட்டத்துடன் முரண்படும் மசோதாவை மாநில அரசு மறுநிறைவேற்றம் செய்து அனுப்பினால், அதை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்ப முடியாதா?

அபிஷேக் மனு சிங்வி: மறுநிறைவேற்றம் செய்யப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க முடியாது. மசோதாவை ஆளுநர் ஆராயவும் முடியாது. அது அவரது வேலை அல்ல. மாநில அரசு சரியான மசோதாவைத்தான் கொண்டு வரும். ஒருவேளை அது முரண்பட்டு இருந்தால், சரிசெய்ய நீதிமன்றங்கள் உள்ளன. அந்த மசோதா முரண்பாடாக இருக்கிறது என்றால் அதை முதல்முறையே குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்பலாம்.இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் செப்.2-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *