தூய்மை பணியாளர் வரலட்சுமி குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

1 Min Read

சென்னை, ஆக.24- கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி இறந்த தூய்மைப்பணியாளர் வரலட்சுமி குடும்பத்திற்கு ரூ.20 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

சென்னை கண்ணகி நகரில் பணிக்கு செல்லும்போது மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் கூறினார். வரலட்சுமியின் குடும்பத்தினரை சந்தித்து ரூ.20 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர்; தூய்மை பணியாளர் வரலட்சுமி குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும். தூய்மை பணியாளர் வரலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்கப்படும். வரலட்சுமியின் கணவர் ரவி உடல்நலம் குன்றியிருப்பதால் அவருக்கான முழு மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்றும் உறுதி அளித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *