காட்பாடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்கப் பரப்புரைக் கூட்டம்

1 Min Read

காட்பாடி, ஆக.21 வேலூர் மாவட்டம் காட்பாடியில் கழகத்தின் சார்பில், 4.10.2025 செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்கப் பரப்புரை கூட்டம். கடந்த 17.08.2025 அன்று இரவு : 7 மணிக்கு காட்பாடி காந்திநகர் பெரியார் சிலை அருகில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டக் கழக செயலாளர் உ.விஸ்வநாதன் தலைமை தாங்கினார், மாவட்ட துணைச் செயலாளர் மு.சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார்,  மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.யுவன்சங்கர்ராஜா இணைப்புரை வழங்கினார்.

மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர. அன்பரசன், மாவட்ட காப்பாளர் வி. சடகோபன் ஆகியோர் துவக்கவுரை ஆற்றினர். மாநில மகளிரணி துணைச் செயலாளர் ந.தேன்மொழி மாநாட்டு விளக்கவுரை ஆற்றினார்.

கழகப் பேச்சாளர் அதிரடி அன்பழகன்  செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டை பற்றி விளக்கமாக விளக்கி சிறப்புரை ஆற்றினார்.

மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் சி.லதா, மாவட்ட துணைத் தலைவர் க.சிகாமணி, மாவட்ட மகளிரணி தலைவர் இரா.இராஜகுமாரி மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச. இரம்யா, மாநகர தலைவர் ந. சந்திரசேகரன், மாநகர செயலாளர் அ.மொ.வீரமணி, மாவட்ட ப.க செயலாளர் வே.வினாயக மூர்த்தி,  குடியாத்தம் நகர தலைவர் சி.சாந்தகுமார், குடியாத்தம் நகர அமைப்பாளர் வி. மோகன், அணைக்கட்டு ஒன்றியத் தலைவர் பொ. இரவீந்திரன், வேலூர் மாநகரம் ஓவியர் தயாளன், குடியாத்தம் நகர ப.க தலைவர் ப. ஜீவானந்தம், போளூர் பன்னீர் செல்வம், மாணவர் கழக இ.எ.இலக்கியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக காட்பாடி நகர தலைவர் பொ. தயாளன் நன்றியுரை ஆற்றினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *