நாகர்கோவில், ஆக. 19- கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தந்தை பெரியாருடைய பிறந்த நாள் சிறப்புக் கூட்டம் நாகர் கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் “பெரியார் எனும் பெரும் நெருப்பு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தந்தை பெரியாருடைய தொண்டுகள், தந்தை பெரியாருடைய உழைப்பால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள், பெரியார் என்றும் ஏன் தேவைப்படுகிறார் என விரிவாக உரையாற்றினார்.
திராவிடர் கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், பெரியார்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாகி சந்திரன், என்.எஸ்.கே.கே. இராஜன் திராவிடர்கழக பொதுக்குழு உறுப்பினர்கள் மு.இராஜசேகர் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர், தோழர்கள் மு.குமரிச் செல்வன், சிவ காலபெருமாள், குமரி நகர செயலாளர் க.யுவான்ஸ்
பெரியார் பற்றாளர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். கழக மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ் நன்றியுரையாற்றினார்.