ஒரே வீட்டில் 230 பேர்!
இது திரைப்படக் காட்சி அல்ல, பீகார் வாக்காளர் பட்டியல் சொல்வது.
இத்தனைப் பேரையும் ஒரு வீட்டில் அடைத்துக் கொண்டிருக்கிறார்களாம் — தேர்தல் ஆணையம் மவுனம்.
முந்தைய கதை கருநாடகாவில் – கதவு எண் ‘‘0’’.
இங்கே பீகாரில் – கதவு எண் ‘‘00’’, ‘‘000’’.
கருநாடகாவில் 85 பேர் – பீகாரில் 230 பேர்!
மக்கள் ஏமாந்து போகிறார்கள்,
நியாயமான வாக்குரிமை பறிக்கப்படுகிறது,
ஆனால் வாக்காளர் பட்டியலில் பொய் நிரம்புகிறது.
அடுத்த இலக்கு – 2026 ஜனவரி, தமிழ்நாடு & மேற்கு வங்காளம், பீகார் சாதனையை முறியடிக்க, ‘‘புதிய சாதனை படைக்க’’ தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது போல!