குற்றாலத்தில் ஜூன் 28, 29, 30, ஜூலை 1 நான்கு நாள்கள் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு திமுக கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் ஹரிப் ரகுமான் ரூ.5,000, தென்காசி மாவட்ட மதிமுக வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சதன்திருமலைக்குமார் ரூ.10,000, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் ரூ.10,000, தென்காசி திமுக நகர சேர்மன் வி.சேக்அப்துல்லா ரூ.5,000 ஆகியோர் நன்கொடை வழங்கினர். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கே.டி.சி.குருசாமி, விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் இல.திருப்பதி, ம.செந்தில்குமார் ஆகியோர் நன்கொடை திரட்டினர்.