திராவிட மாணவர் கழகம் நடத்திய கல்லூரி மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

1 Min Read

சென்னை, ஆக. 3- சென்னை பெரியார் திடலில்  திராவிட மாணவர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு கூட்டம்  (2.8.2025) சிறப்பாக நடைபெற்றது.

ஜாதி ஒழிப்பின் தேவை, கடவுள் மறுப்பு ஏன்,  பெண்ணுரிமை, சமூகநீதி களத்தில் மாணவர்களின் பிரச்சினைகளான அய்.அய்.டி-யில் குருகுலம் கல்வியை ஊக்குவிக்கும் திட்டம், நீட் தேர்வு, விஸ்வகர்மா யோஜனா,  தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றை குறித்து கலந்துரையாடினர்.

திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூர பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  மாநில கிராமப்புற பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன் அவர்கள் வருகை தந்த மாணவர்களுக்கு “பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகத்தை அன்பளிப்பாக அளித்தார். மாணவர்களை ஒருங்கிணைத்து வடசென்னை மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் ச.சஞ்சய் அனைவருக்கும் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *